Monday, April 23, 2012

அதிகாலை எழுந்து 
அனைத்தும் முடித்து 
கிளப்பி,கிளம்பி.
தப்பிப்பிழைத்து 
வீடுதிரும்பி 
வேலைகள் முடித்து 
மல்லிகை சூடிக் 
காத்திருக்க.
கலைந்த தலை,
குத்தும் தாடி,
வியர்வை நாற்றம்,
எந்திரச் செய்கை.
கல்லாய் இறுகிக்
கட்டையாய்க் கிடந்தாலும்
என்ன செய்வது 
மூக்கை?   

No comments:

Post a Comment