Tuesday, April 24, 2012

வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி 
காலச்சிறகசைத்து
பறந்து திரிந்தது.
 
சிறகுகளைப்பிடித்துக்
கற்றுத்தந்தனர்,
சரியான பாதையில்
சரியாகப்பறக்க.
 
கற்பித்தவர் கைகளில்
சிறகு வண்ணங்கள்
தூசியாய்.
 
சிறகுகள் கைகளாகத்
தோள்களில் பாரமாய்
காலம்.      
 
    

No comments:

Post a Comment