Friday, October 31, 2014

"இவன் ஓவியன்டீ....."
தலை தூக்கி அலறியது,
வலது மூளையை ருசித்த புழு.
" தமிழன்",
"ஆசிரியன்",
"ஆட்டக்காரன்",
" ",
" ",
என எழுந்த குரல்களை மீறி ஒலித்தது,
" ஒரு நொடி மௌன அஞ்சலி".

தலை தாழ்த்தி உண்ணத்தொடங்கின,
உடலெங்கும் புழுக்கள்.


No comments:

Post a Comment