Friday, October 31, 2014

காலையில் கதவு திறக்கும்போது
என் கால்களுக்கிடையே புகுந்து
வீட்டுக்குள் ஓடியது ஓர் எலி.
திரும்பிப்பார்ப்பதற்குள் மறைந்து போனது.
எங்கே போயிருக்கும்?
நவீன சமயலறையில்,
குளிர் பதனப்பெட்டிக்குப் பின்,
மாடியேறி என் அறைப்புத்தகங்களுக்குள்,
படுக்கையறைக்கட்டிலின் கீழ்,
பிள்ளைகளின் பள்ளிப் பைக்குள்,
மூட மறந்த மனைவியின் சேலை அலமாரியுள்,
தொலைக்காட்சிப் பெட்டியுள்ளே,
ஓவியக் கித்தான் அணிற்கூட்டினுள்,
குளிர்சிக்காக குளியலறை மூலைக்கு,
ஹாலில் ஷோபா குஷனுக்கு கீழ்,
இல்லை...என் 'ஷு'க்குள்,
எங்கிருந்தால் என்ன.
மனிதன் புகுந்த இடத்திலிருந்த உயிரினமும்,
மனிதன் இருக்கும் இடத்தில் புகுந்த உயிரினமும்
பிழைத்ததாக வரலாறே இல்லை.

No comments:

Post a Comment