Friday, October 31, 2014

சணலைச் சவைத்துப் பஞ்சாக்கி,
மரச்சட்டத்தைத் துருவித் தூவி,
என் ஓவியக் கித்தான்களிடையே
அணிற்படுக்கை.
என்ன செய்வது?
எப்போதோ வரும் என்னை
எப்போதுமிருக்கும் அவன்,
மோட்டுவளையிலிருந்து பார்த்திருந்தான்.
சிரித்து நகர்ந்தேன்.
கிக்.,கிக்...,கிக்.......,ககீக்..............
எனப் பெருங்குரலெடுத்தான்,
'installation' கலைஞன்.
 
 

No comments:

Post a Comment