Saturday, July 19, 2014

நீரகராதிக்காரி நீ.
ஏற்கும் பொறுளின் பொருளேற்கும்
விந்தைச்சொற்களின் சொந்தக்காரி.
கடலாழ அமைதியும்
அருவியாய் வீழ்ந்தறைந்தெழும் ஆவியும்
இன்னும் இன்னும் உன்
அறியா அனைத்து வடிவங்களுக்குள்ளும்
எதிலோ மறைந்த சிறுதுளி நான்.
நீரகராதிக்காரி நீ.

No comments:

Post a Comment