Saturday, July 19, 2014

பூட்டில் சாவியுடனேயே
சார்த்தியிருக்கிறது,
என்னறைக்கதவு.
திறந்தால் பூட்டிக்கொள்ளும்.
பூட்டினால் திறக்கும்.
தெரிந்தவர்மட்டுமே
திறக்க முடியும் என்பதால்
சாவியுடனேயே
எப்போதும் சார்த்தியிருக்கிறது,
என்னறைக்கதவு.

No comments:

Post a Comment